வாய்மொழித் தேர்வு 2015
உயர்நிலை 2 விரைவு
மனிதர்களின் வாழ்வில் உற்சாகம் என்பது வெளிச்சம் மாதிரி.அந்த உற்சாகம் ஒவ்வொரு மனிதரிடமும் இருக்க வேண்டியது அவசியம். வாழ்வில் பல துன்பங்கள் வந்தாலும் உற்சாகம் மட்டும் இருந்து விட்டால், அந்த துன்பங்களை எதிர்த்து ஜெயிக்க முடியும்.உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி காண்பதில்லை. யார் உற்சாகமாக உழைக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியடைகிறார்கள். உற்சாகம் இல்லாத வெற்றி, பாதி கிணற்றைத் தாண்டியது போல் ஆகிவிடும். சிலர் வாழ்வில் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். சிலர் எப்போதும் தோல்வியடைந்தவர்கள் போல் இருப்பார்கள். உற்சாகம் மட்டும் இருந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
துன்பங்கள் வரும்போது நாம் நமது, துன்பங்களை மறந்து சிரிக்க பழக வேண்டும். அதைத்தான் வள்ளுவர் இடுக்கண் வருங்கால் நகுக. என்கிறார். நீங்கள் உற்சாகமாக இருந்தால் உங்கள் நடையே அதைக் காட்டிவிடும். நமது திரைப்பட நடிகர்கள் சிலர் உற்சாகத்திற்குப் பெயர் பெற்றவர்களாக உள்ளனர்.
இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த திரு.அப்துல் கலம் அவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பார். தன் வீட்டில் இருந்த ரோஜா செடியில் ஒரு பூ பூத்திருந்தால் அதை சற்று நேரம் கண்டு களிப்பது அவர் உள்ளத்திற்கு உற்சாகம் கொடுப்பதாக அவர் தம்முடைய நூலில் கூறியுள்ளார். நாமும் உற்சாகமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
திருக்குறள் கற்க
1.
No comments:
Post a Comment